செந்தூர காப்பு அலங்காரத்தில் மருதூர் அனுமந்தராயர் சுவாமி அருள்பாலிப்பு
ADDED :883 days ago
காரமடை : காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தில் உள்ள அனுமந்தராயர் சுவாமி கோயிலில் வைகாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் ஜெயமங்கள ஆஞ்சநேயர் செந்தூர் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேய சுவாமியை தரிசனம் செய்தனர்.