உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை வராகி கோயிலில் வளர்பிறை பஞ்சமி வழிபாடு

உத்தரகோசமங்கை வராகி கோயிலில் வளர்பிறை பஞ்சமி வழிபாடு

உத்தரகோசமங்கை உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு மூலவர் அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. வராகி அம்மனுக்கு தங்கக்கவசம் சாற்றப்பட்டு, சர்வ மலர் அலங்காரம் செய்தனர். கோயில் வளாகத்தில் உள்ள அம்மிக்கல்லில் ஏராளமான பெண்கள் பச்சை விரலி மஞ்சளை அரைத்து, நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றினர். நீண்டவரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !