வைகாசி செவ்வாய்; ஜெய மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :823 days ago
கோவை; சுந்தராபுரம் காமராஜ் நகரில் உள்ள சித்தி விநாயகர், சக்தி விநாயகர், ஜெய மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் நான்காவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு உற்சவர் அம்மனுக்கு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஜெயமாரியம்மன் காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.