உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் ஆனி லட்சார்ச்சனை, நடை அடைப்பு

சபரிமலையில் ஆனி லட்சார்ச்சனை, நடை அடைப்பு

சபரிமலை: சபரிமலையில் ஆனி மாத பூஜைகளை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது.

சபரிமலையில் ஆனி மாத பூஜைகளுக்காக 15ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றினார். தொடர்ந்து ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. 16ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. இன்று 20ம் தேதி வரை தினமும் காலையில் உஷபூஜை, மதியம் களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்சபூஜை, மாலையில் தீபாராதனை , புஷ்பாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு படிபூஜை, 9:00 மணிக்கு அத்தாழபூஜை ஆகியவை நடைபெறும். பூஜைகள் நிறைவு பெற்று இன்று 20ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !