உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு ஆனி திருமஞ்சனம்

ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு ஆனி திருமஞ்சனம்

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. இங்கு, வைணவ மகான் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ராமானுஜரின் அவதார நட்சத்திரமான திருவாதிரையன்று, மாதந்தோறும் ராமானுஜருக்கு திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். நேற்று ஆனி மாதம் திருவாதிரை திருமஞ்சனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !