வால்பாறை ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :913 days ago
கோவை: வால்பாறை நகரம், சிறுவர் பூங்காவில் அமைந்துள்ள அன்னை ஆதிபராசக்தி திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து கால யாக பூஜைகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அன்னை ஸ்ரீ ஆதிபராசக்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.