மஞ்சள்பட்டணம் விநாயகர் கோயில் வருஷாபிஷேகம்
ADDED :897 days ago
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி மஞ்சள்பட்டணம் சித்தி விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. இக்கோயிலில் 2022 ஜூன் 16 ம் தேதி நான்கு கால யாக பூஜைகளுடன் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜைகள் நிறைவடைந்து, நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை 7:00 மணி தொடங்கி ஹோமம், யாகசாலை பூஜைகள், மகாபூர்ணாகுதி நடந்தது. பின்னர் விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நிறைவடைந்து, சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் வக்கீல் ராமதாஸ், ராமலிங்கம், முத்துசாமி, கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.