உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் கோ பாதுகாப்பு அறக்கட்டளைக்கு நன்கொடை

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் கோ பாதுகாப்பு அறக்கட்டளைக்கு நன்கொடை

காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால  மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் இயங்கும் (கோ சம்ரக்ஷனா டிரஸ்ட்) கோ பாதுகாப்பு அறக்கட்டளைக்காக கடப்பா மாவட்டம் போருமாவில்லு  பகுதியை சேர்ந்த மஞ்சு வாணி  குடும்பத்தினர் ஒரு லட்சம் ரூபாய்  நன்கொடையாக  கோயில் நிர்வாகத்திற்கு (ஆன்லைன் மூலம்) வழங்கினர். முன்னதாக இவர்களுக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடுகளை செய்தனர். கோவிலுக்குள் சென்றவர்கள் விநாயகப் பெருமானை சாமி தரிசனம் செய்தனர் இதனைத் தொடர்ந்து கோயில் சார்பில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கியதோடு வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !