திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் விழா
ADDED :1145 days ago
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் மதுரை சொக்கர் குடில் அமைப்பு சார்பாக பன்னிரு திருமுறை முற்றோதல் விழா நடந்தது. காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் என திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ஆலயம் போற்றப்படுகிறது. திருஞானசம்பந்தர் பாடல் பாடிய ஸ்தலம் என்பதால் இங்கு விஷேச பூஜைகள் நடத்தப்படும், இன்று மதுரை சொக்கர் குடில் அமைப்பு சார்பாக பண்முறையில் அமைந்த நான்காம் திருமுறை திருவாசகம் முற்றோதல் விழா காலை எட்டு மணிக்கு தொடங்கி மதியம் வரை நடந்தது. விழாவில் சிவனடியார்கள் உள்ளிட்ட பக்தர்கள் பலரும் பங்கேற்று திருவாசகம் முற்றோதல் வாசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை சொக்கர் குடில் அமைப்பு செய்திருந்தது.