மருநூத்து காளியம்மன் கோவில் மண்டல பூஜை 108 சங்காபிஷேகம்
கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே மருநூத்து காளியம்மன், விநாயகர், முருகன் கோவில்களில் நடந்த மண்டல பூஜையில் திண்டுக்கல் சிவபுரா ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார்.
விழாவையொட்டி முன்னதாக கடந்த மே 24 மருநூத்து காளியம்மன், விநாயகர், முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று 48வது மண்டல அபிஷேக பூர்த்தி பூஜைகள், யாகசாலை பூஜைகளும் நடந்தது. அதனைத் தொடர்ந்து108 வலம்புரி சங்காபிஷேகமும் நடந்தது. இந்த மண்டல பூஜை விழாவில் திண்டுக்கல் சிவபுரா ஆதீனம் முதலாவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். மாலை பெண்கள் திரளாக கலந்து கொண்ட திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. யாகசாலை பூஜைகளை திண்டுக்கல் காலகஸ்தி குருக்கள் நடத்தி வைத்தார். இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மருநூத்து காளியம்மன் கோவில் திருப்பணி குழுவை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.