சிறுகாவேரிபாக்கம் பச்சையம்மன் வீதியுலா
ADDED :1127 days ago
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், நிமந்தகார தெருவில், சந்தவெளி அம்மன், பச்சையம்மன், கருக்கினில் அமர்ந்தவள் அம்மன், அரசுகாத்தம்மன் ஆகிய சக்திகள், ஆக.,25ல் நடக்கும் பதி அமர்த்தும் விழாவையொட்டி, கடந்த மாதம் 25ல் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. முதல் நாள் உற்சவமான கடந்த 7ம் தேதி, சந்தவெளி அம்மன் நிமந்தகார தெருவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் இரவு, சிறுகாவேரிபாக்கம் பச்சையம்மன் அலங்கரிக்கப்பட்ட, புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார். பல்வேறு வீதி வழியாக உலா வந்து, பெரிய காஞ்சிபுரம், நிமந்தகார தெருவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பலித்தார். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.