/
கோயில்கள் செய்திகள் / கம்பீர விநாயகர் கோவிலில் ஆடிப்பூர விழா; வெள்ளி கவசத்தில் அம்மன் அருள்பாலிப்பு
கம்பீர விநாயகர் கோவிலில் ஆடிப்பூர விழா; வெள்ளி கவசத்தில் அம்மன் அருள்பாலிப்பு
ADDED :995 days ago
கோவை; சுந்தராபுரம் காமராஜ் நகர், குறிச்சி ஹவுஸிங் யூனிட் பேஸ் - 1 ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள மூலவர் புவனேஸ்வரி அம்மன் கையில் கரும்புடன் காமாட்சியம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார். துர்க்கை அம்மன் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.