கொடைக்கானல் பூம்பாறை முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ADDED :811 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பழநி முருகன் கோயிலின் உபக்கோயிலான பூம்பாறை முருகன் கோயிலில் சஷ்டி பூஜை விமர்சியாக நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் விளக்கு பூஜை, பஜன் நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக சென்னை போகர் பவுண்டேஷன் சார்பில் அன்னதானம் நடந்தது. இதில் மலேசியாவை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.