ஆடி சோமவாரம்; ஓம் நமசிவாய சொல்லி ஈசனை வழிபட நினைத்தது நடக்கும்!
ADDED :877 days ago
சோமவாரத்தில் சிவனை தரிசனம் செய்தால் அவரவர் வேண்டும் பலனை ஈசன் நிச்சயம் தருவார் என்பது உறுதி. சிவப்பெருமானுக்கு திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் சோமவார விரதம் என்று பெயர். சோமவார நாளில் இறைவனை வழிபடுவதால் பாவங்கள் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கும், எல்லா நற்பலன்களையும் சோமவார விரதம் தரும். ஆடி சோமவாரமான இன்று ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து வாழ்வில் உயர்வடைவோம்.