சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோட்சவம்; பக்தர்கள் தரிசனம்
ADDED :826 days ago
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோட்சம் நிறைவு விழா நடந்தது.
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பவிந்ரோட்சவ விழா கடந்த 5ம் தேதி துவங்கியது. 5ம் தேதி காலை உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமதே ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். கலச பிரதிஷ்டை செய்து சிறப்பு ஹோமமம், சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. 6ம் தேதி காலை சிறப்பு ஹோமமும், சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. இன்று காலை மூன்றாம் கால யாக பூஜையும் மகா பூர்ணாஹூதியும் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு பவித்ர மாலை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.