/
கோயில்கள் செய்திகள் / இன்று ஆடிச்செவ்வாய், தேய்பிறை அஷ்டமி ; அம்மன், பைரவர், முருகனை வழிபட நல்லதே நடக்கும்
இன்று ஆடிச்செவ்வாய், தேய்பிறை அஷ்டமி ; அம்மன், பைரவர், முருகனை வழிபட நல்லதே நடக்கும்
ADDED :825 days ago
ஆடிச்செவ்வாய் விரதம் அம்பிகை, முருகனுக்குரிய விரதமாகும். ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு சுபிட்சம் அடையும். வீட்டில் அம்மனை வழிபட குடும்பத்தில் சங்கடங்கள் நீங்கி செல்வம் பெருகும். செந்நிற மலர்களால் அம்மன், முருகனுக்கு அர்ச்சனை செய்ய நினைத்தது நிறைவேறும். இன்று பெண்கள் கணவனின் ஆயுள் நீடிக்க ஒளவையார் விரதம் இருப்பது சிறப்பு. வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி அம்மன் மந்திரம் கூறி வணங்க வேண்டும். இன்று அம்மன், முருகனை வழிபட ஆரோக்கியம் மேம்படும், கடன்கள் தீரும். பைரவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபடுவது சிறப்பு. இன்று காலை அம்மன், முருகன், மாலை பைரவரையும் தரிசிப்பது சிறப்பு.