ஆடி சனி, ஏகாதசி; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :847 days ago
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஆடி கடைசி சனிக்கிழமை மற்றும் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெங்கடாஜலபதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.