நடுவனூர் பகவதி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை
ADDED :845 days ago
நத்தம், நத்தம் அருகே நடுவனூரில் உள்ள பகவதியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டும், உலக நன்மை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது.முன்னதாக அம்மனுக்கு சிறப்புஅபிஷேகம், அலங்காரம்,மற்றும் தீபாராதனை நடந்தது.இதில் அப்பகுதியைச்சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை நடுவனூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.