உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் குவிந்த பக்தர்கள்; ஒரே நாளில் 84,401 பேர் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதியில் குவிந்த பக்தர்கள்; ஒரே நாளில் 84,401 பேர் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை : திருமலை திருப்பதியில் நேற்று பக்தர்கள் 84,401 பேர் சுவாமி தரிசனம் செய்து 3.76 கோடி ரூபாய் காணிக்கை செலுத்தினர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் ரூ.3.76  கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதில் ஒரே நாளில் 84,401 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று காலை 31 காத்திருப்பு அறைகளை கடந்து, வெளியில் உள்ள வரிசையில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களுக்கு 24மணிநேரம் காத்திருப்பிற்கு பின்பு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !