வடகாட்டுப்பட்டி சீரடி சாய்பாபா கோவிலில் பால் அபிஷேகம் ; ஆரத்தி பூஜை
ADDED :837 days ago
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டியில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் ஆரத்தி பூஜை, அன்னதானம் மற்றும் தேர் பவனி நடந்தது.
நேற்று அதிகாலை ஆரத்தி பூஜையில் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து, செந்தாமரம் வீசி பூஜை செய்தனர். மதியம் நெய் தீபம் ஏற்றி ஆரத்தி பூஜை நடந்தது. பின் சாய்பாபாவிற்கு காணிக்கை புத்தாடை அணிவித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. மாலை ஆரத்தி பூஜை நடத்தப்பட்டு சாய்பாபா கோயிலில் இருந்து பக்தர்கள் இழுத்து செல்ல தேர் பவனி நடந்தது. இதில் நத்தம், கோபால்பட்டி, திண்டுக்கல், செந்துறை உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசித்தனர். காலை 10 மணி முதல் மாலை வரை பக்தர்களுக்கு ஆரத்தி பூஜை விழா தொடர் அன்னதானம் நடந்தது.