உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துபராள்பதி அம்மன் கோயிலில் பாலஸ்தாபன பூஜை

துபராள்பதி அம்மன் கோயிலில் பாலஸ்தாபன பூஜை

கொட்டாம்பட்டி: ஐம்பெரும் கிராமம் சொக்கலிங்கபுரத்தில் உள்ள துபராள்பதி அம்மன் கோயில் பாலஸ்தாபனத்தை முன்னிட்டு ஆக.17 ல் வாஸ்து சாந்தி நடைபெற்றது. ஆக.18 ல் 108 கோமாதா பூஜையும், ஆக 19 ல் தீபசண்டி பூஜையும் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று பாலஸ்தாபன பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இப் பூஜையில் சொக்கலிங்கபுரம் மற்றும் கொட்டாம்பட்டி பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !