அருணாசலேஸ்வரர் கோவிலில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
ADDED :1085 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை கோயிலுக்கு நேற்று வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகம் வருகை புரிந்தனர். பொது, கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விடுமுறை தினம், ஆவணி முகூர்த்த நாள் காரணமாக சன்னதி வீதியில் கூட்டம் அதிகம் இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.