உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கக் கவசத்தில் உத்தரகோசமங்கை வராகி அம்மன் அருள்பாலிப்பு

தங்கக் கவசத்தில் உத்தரகோசமங்கை வராகி அம்மன் அருள்பாலிப்பு

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் தேய்பிறை பஞ்சமி தினத்தை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் வராகி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு மலர் அலங்கார மும் விசேஷ தீபாராதனை யும் நடந்தது. முன்னோர் கள் சாபம் நீங்கவும், பித்ரு கடன் தோஷம் நீங்கவும் ஏராளமானோர் அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !