புரட்டாசி சனி; ரத்னாங்கி சேவையில் பிரசன்ன வெங்கடேச பெருமாள்
ADDED :1028 days ago
தஞ்சாவூர் ; தஞ்சாவூர், நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று( 23ம் தேதி) புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.