உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோத்சவம்; ஸ்வர்ண பாத பூஜை

காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோத்சவம்; ஸ்வர்ண பாத பூஜை

காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. விழாவில் ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகளுக்கு ஸ்ரீ சத்ய சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் புஷ்பாஞ்சலி செய்து வழிபட்டார்.


காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதையொட்டி, காஞ்சிபுரம் சங்கரமடத்தில், தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் வேதபாராயணம், வித்வத் ஸதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், சங்கீத கச்சேரிகள் நடைபெற்றது. இதில், வேதவிற்பன்னர்கள் பங்கேற்ற சிறப்பு ஹோமம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மஹா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹாதீப ஆராதனை உள்ளிட்டவை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காஞ்சி மடாதிபதி விஜயேந்திரரின், ஜெயந்தி மகோத்சவ தினமான இன்று காலை 7:00 மணி முதல், மஹா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில், அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹாதீப ஆராதனை, பூர்ணாஹுதி மற்றும் மஹாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. பூஜ்யஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள், ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளுக்கு ஸ்வர்ண பாத பூஜை மற்றும் புஷ்பாஞ்சலி செய்து ஆசி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !