காளியம்மன் கோயிலில் நள்ளிரவில் சிறப்பு பூஜை
ADDED :751 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் தாழை மடல் காளியம்மன் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை மற்றும் நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு மஞ்சள், பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்பு, அம்மன் துதி பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் முன்பு பெண்கள் கும்மியாட்டம் ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.