மாமன்னன் ராஜராஜசோழனின் 1038வது சதய விழா; தஞ்சை பெரியகோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்
தஞ்சாவூர்,தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய, மாமன்னன் ராஜராஜசோழனின் 1,038 வது சதய விழாவிற்கான, பந்தக்கால் இன்று காலை (11ம் தேதி) நடப்பட்டது.
தஞ்சாவூர், பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தின் அன்று, ராஜராஜ சோழனுக்கு சதய விழா என்ற பெயரில்,இரண்டு நாட்கள் சிறப்பாக விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சதய விழா வரும் அக்.,24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, பெரிய கோவிலில் இன்று (11ம் தேதி), காலை பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. முன்னதாக பந்தக்காலுக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சதய விழாவை முன்னிட்டு வரும் அக்.24ம் தேதி பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெறவுள்ளது.