உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா

முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே மொட்டையன் வலசை ராஜபுரம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 139 ஆண்டு முளைப்பாரி உற்வவ விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவில் ஆண்களின் ஒயிலாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் நடந்தது. இன்று காலை 8:00 மணியளவில் காவடி, தீச்சட்டி எடுத்து கிராம வீதியுலா வந்தனர். பகலில் அன்னதானம் நடந்தது. மாலை 5:00 மணியளவில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்து சென்று ஊரணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

* களிமண்குண்டு ஊராட்சிக்குட்பட்ட குத்துக்கல்வலசையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது. கடந்த அக்.1 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சக்தி கரகம் முன்னே செல்ல கிராம மக்கள் பங்கேற்றனர். இன்று காலையில் மாவிளக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குத்துக்கல்வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !