முதல் முறையாக காலபைரவர் சித்தர் பீடத்தில் 2025 கிலோ காய்கறியில் மகா யாகம்
ADDED :1002 days ago
தூத்துக்குடி : தமிழகத்தில் மழை செழித்து விவசாயம் பெருக, மக்கள் நோய் நொடி இன்றி வாழ, தூத்துக்குடி கோரம்பள்ளம் காலபைரவர் சித்தர் பீடம் பிரத்தியங்கரா தேவி கோயிலில் 2025 கிலோ கேரட், பீட்ரூட், கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு மூலம் முதல் முறையாக மஹாயாகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட தரிசனம் செய்தனர்.