உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயில்களில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

திருப்பரங்குன்றம் கோயில்களில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடந்தது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து அன்னாபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கோயில் வளாகத்திலுள்ள பசுபதீஸ்வரர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில்களில் மூலவர்களுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. மலைக்குப் பின்புறமுள்ள பால் சுனை கண்ட சிவபெருமான், பஞ்சலிங்கத்திற்கு மூலிகை அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து அன்னம் சாத்துப்படி செய்து, பழங்கள், காய்கறிகள் படைக்கப்பட்டது. தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில், திருநகர் சித்தி விநாயகர் கோயில், பாண்டியன் நகர் கல்யாண விநயாகர் கோயில்களில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !