நெல்லையில் அம்மன் கோயில் உண்டியல் உடைத்து திருட்டு
ADDED :1043 days ago
நெல்லை, கொக்கிரகுளத்தில் புது அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உண்டியல் உடைத்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.