திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED :737 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
குன்றக்குடி ஐந்துகோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோகநிலையில் பைரவர் அமர்ந்த தோற்றத்தில் அருள்பாலிக்கிறார். யோகபைரவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மூலவர் யோகபைரவருக்கு நேற்று காலை 11:00 மணிக்கு ரமேஷ் மற்றும் கணேச குருக்களால் சிறப்பு பூஜைகள் நடந்து பல வித திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சந்தனக் காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். சிறப்பு தீபராதனையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.