கார்த்திகை சதுர்த்தி; விநாயக பெருமானுக்கு 108 தேங்காய் அபிஷேகம்
ADDED :684 days ago
கோவை; ராம் நகர், பிரசன்ன மகா கணபதி கோயிலில் கார்த்திகை முதல் தேதி மற்றும் வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் மூலவர் விநாயக பெருமானுக்கு 108 தேங்காய் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.