உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் நித்தீஸ்வரர் கோவிலில் சோமவார 1008 சங்காபிஷேகம்

காரைக்கால் நித்தீஸ்வரர் கோவிலில் சோமவார 1008 சங்காபிஷேகம்

காரைக்கால்; காரைக்கால் ஸ்ரீநித்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியில் உள்ள ஸ்ரீநித்யகல்யாணி சமேத ஸ்ரீநித்தீஸ்வர கோவிலில் நேற்று கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நித்திஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விசேஷ மஹா ஹோமம் அதனை தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களினால் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் மற்றும் வலம்புரி சங்குகளை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து கலசம் மற்றும் சங்குகளிலிருந்த புனித நீரினால் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் சிவன் மற்றும் அம்பாளுக்கும் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதுப்போல் திருநள்ளாறு தார்பாரண்யேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !