உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு சம்பக சஷ்டி விழா அஷ்டபைரவர் யாகத்துடன் நேற்று துவங்கியது.

குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோகநிலையில் அருள்பாலிக்கும் பைரவருக்கு ஆண்டு தோறும் 6 நாட்கள் சம்பகசஷ்டி விழா நடைபெறும். நேற்று யோகபைரவர் சன்னதி முன்பாக யாகசாலையில்  காலை 9:30 மணிக்கு ரமேஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்கள்  அஷ்டபைரவர்யாகத்தை துவக்கினர். தொடர்ந்து காலை 11:30 மணிக்கு யாகசாலையில் பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசங்கள்  புறப்பாடாகி மூலவர் பைரவருக்கு அபிேஷகம் நடந்தது. வெள்ளி கவசத்தில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பைரவர் அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த தீபாராதனையை திரளாக பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் மாலை 5:30 மணிக்கு மீண்டும் அஷ்ட பைரவர்யாகம் நடந்து மூலவருக்கு அபிேஷக,ஆராதனைகள் நடைபெற்றது.  டிச.18 வரை தினசரி காலை,மாலை இருவேளைகளில் அஷ்டபைரவர் யாகம் நடைபெறும். ஏற்பாட்டினை சம்பக சஷ்டி விழாகுழுவினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !