பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு
ADDED :733 days ago
விழுப்புரம்; பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பரமபத வாசல் வழியாக வந்து உற்சவர் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.