உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :663 days ago
உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை வழிபாடு நடந்தது.
உளுந்தூர்பேட்டையில் கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு காலை 4 மணியளவில் சுவாமிக்கு பால், தயிர், நெய், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை வழிபாடுகள் நடந்தது. அதேபோல் உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேக, தீபாராதனை வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.