உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி செவ்வாய்; சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

மார்கழி செவ்வாய்; சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் மார்கழி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் விபூதி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !