மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
614 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
614 days ago
காரைக்குடி; காரைக்குடியில் எல்லா உயிர்களுக்கும் படி அளக்கும் விழா மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகரச் சிவன் கோயிலில் நடந்தது.ஆண்டுதோறும் மார்கழி அஷ்டமி தினத்தன்று விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் தனித்தனியாக சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். இந்தாண்டு அஷ்டமி திருவிழா இன்று காலை நகரச்சிவன் கோயிலில் நடந்தது. விழாவையொட்டி கோயிலில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் உட்பட அனைத்து சுவாமிகளும் காலை 7 அலங்கரிக்கப்பட்ட 5 சப்பரத்தில் புறப்பட்டு ந.புதூர் செஞ்சை கொப்புடையம்மன் கோயில், மகர் நோன்பு பொட்டல் வழியாக இரவு நகரச் சிவன் கோயிலை அடைந்தனர். படி அளக்கும் நிகழ்வில், படி அளந்த அரிசியை பக்தர்கள் பெற்றுக் கொண்டனர்.
614 days ago
614 days ago