பழநி பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை
ADDED :783 days ago
பழநி; பழநி, ஆனந்த விநாயகர் கோயிலில் பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழநி தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாக பக்தர்கள் அதிகளவில் வருகை புரிகின்றனர். பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் நலன் வேண்டி சிறப்பு மலைக்கோயில் ஆனந்த விநாயகர் கோயிலில் பூஜைகள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்துடன் கும்ப கலசங்கள் வைத்து கணபதி பூஜை, வேத மந்திரங்கள் முழங்க திசா ஹோமம் பூஜை நடந்தது. கும்ப கலசங்களுக்கு தீபாராதனை நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கும்ப கலச புனித நீரில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹர முத்து அய்யர் மற்றும் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.