உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று அனுமன் ஜெயந்தி; ஸ்ரீராம ஜெயம் சொல்லி ஆஞ்சநேயரை வரவேற்போம்.. நல்லருள் பெறுவோம்!

இன்று அனுமன் ஜெயந்தி; ஸ்ரீராம ஜெயம் சொல்லி ஆஞ்சநேயரை வரவேற்போம்.. நல்லருள் பெறுவோம்!

மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். ராம பக்தனாகவும், சிவனின் அம்சமாகவும் இருப்பது இவரின் சிறப்பு. ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும்  பெருமாளையும்  சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை  நாம்  கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம்   பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு,  வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.

அனுமன் அவதார நாளில்  அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு  சென்று

‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்

என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம்.  அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் ‘அனுமன் சாலீஸா   பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. இன்று ராமநாமம் சொல்லுங்க.. ஆஞ்சநேயர் அருளை பெறுங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !