உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த செஞ்சி பக்த ஆஞ்சநேயர்

சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த செஞ்சி பக்த ஆஞ்சநேயர்

செஞ்சி; செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவில் பக்த ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்தனர். செஞ்சி பீரங்கிமேடு அருணாசல ஈஸ்வரர் கோவிலில் உள்ள பக்த ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், சந்தனகாப்பு அலங்காரமும் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மேல்மலையனுார் மிருதுவ சஞ்சீவி மகிமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !