யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!
ADDED :634 days ago
பட்டாபிஷேகத்திற்கு முதல் நாள் அயோத்தியிலுள்ள ரங்கநாதரை தரிசிக்க ராமனும், சீதையும் சென்றனர். அதாவது தன்னைத் தானே வணங்கச் செல்கிறான் ராமன். ‘அர்ச்சகனும் அவனே, அர்ச்சிக்கப்படுபவனும் அவனே’ என்ற அபூர்வ நிலை. மனிதனாக பிறந்ததால் இப்படி ஒரு நாடகத்தை நிகழ்த்துகிறான். யாருக்கும் கிடைக்காத அந்த பாக்கியம் கிடைத்தாக எண்ணிய சீதை இமை கொட்டாமல் விரிந்த கண்களுடன் பார்த்தாள். இதன் காரணமாக சீதையை ‘விசாலாக்ஷ்யா’ (அகன்ற கண்களை உடையவள்) என அழைக்கிறார் வால்மீகி முனிவர்.