உஜ்ஜயினி மகாகாலேஷ்வர் கோயிலில் சிவ நவராத்திரி விழா; பக்தர்கள் பரவசம்
மத்தியப் பிரதேசம்: உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் சிவ நவராத்திரி விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.
மத்திய பிரதேசம் உஜ்ஜயினியில் மகாகாளேஸ்வரர் என்னும் சிவன் தெற்கு நோக்கியபடி தட்சிணாமூர்த்தி அம்சத்துடன் இருக்கிறார். இவரை வழிபட்டால் எதிர்கால வாழ்வு உயரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் புனித நீராடல் வைபவம் நடக்கும். உஜ்ஜயினி மகாகாளேஸ்வரரை ஒருமுறை தரிசித்தாலே மோட்சம் கிடைக்கும். மாணவர்கள் இவரை தரிசிக்க கல்வி வளர்ச்சி ஏற்படும். இங்கு வழிபட்டதன் பயனாக ‘மகாகவி’ என்னும் பட்டத்தை காளிதாசர் பெற்றார். புராணங்களில் இத்தலம் ‘அவந்தி’ என அழைக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் சிவ நவராத்திரி விழா துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு பிரசாதங்கள் படைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.