உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மாரியம்மன் கோவில் திருவிழாவில் 1008 பால்குட ஊர்வலம்

பழநி மாரியம்மன் கோவில் திருவிழாவில் 1008 பால்குட ஊர்வலம்

பழநி; பழநியில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு பெற்றதை முன்னிட்டு உற்ஸவ சாந்தி நிகழ்ச்சியில் அம்மனுக்கு 1008 பால் குடங்கள் வ.உ.சி மன்ற தலைமையகம் சார்பில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அம்மனுக்கு உற்சவ சாந்தி அபிஷேகம் நடைபெற்ற பின் அன்னாபிஷேகம் நடைபெற்று மகேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டது. தீபாராதனை நடந்தது. இதில் சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், சித்தநாதன் பழனிவேல், கார்த்திகேயன், நாகராஜன், செந்தில்குமார், விஜயகுமார், வ.உ.சி.மன்றத் தலைவர் அசோக், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் சுந்தர், நிர்வாகிகள் முருகேசன், குகன், ஐயப்பன் நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி,நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !