உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.5.29 கோடி

பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.5.29 கோடி

பழநி; பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.29 கோடி கிடைத்தது.

பழநி முருகன் கோயிலில் ஏப்.8, 12ல் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இரு நாட்கள் எண்ணிக்கையில் காணிக்கையாக 1.196 கிலோ தங்கம், 21.783 கிலோ வெள்ளி கிடைத்தது. மேலும் ரூ. 5 கோடியே 29 லட்சத்து 34 ஆயிரத்து 887 மற்றும் 717 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. நேற்று ஏப்.12 எண்ணிக்கையில் காணிக்கையாக 385 கிராம் தங்கம், 6.383 கிலோ வெள்ளி கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 36 லட்சத்து 85 ஆயிரத்து 742 மற்றும் 214 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !