உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் பூமாயி அம்மனுக்கு பூத்தட்டு எடுத்து வந்து பெயிண்டர்கள் வழிபாடு

திருப்புத்தூர் பூமாயி அம்மனுக்கு பூத்தட்டு எடுத்து வந்து பெயிண்டர்கள் வழிபாடு

திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்தப்பெருவிழாவை முன்னிட்டு  பூத்தட்டு எடுத்து பெயிண்டர்கள் நல சங்கத்தினர் அம்மனை வழிபட்டனர். பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழா 8 ம் திருநாளை முன்னிட்டு பெயிண்டர்கள் நல சங்கத்தினர் நான்காவது ஆண்டாக பூத்தட்டு எடுத்தனர். நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பூத்தட்டுடன் திருத்தளிநாதர் கோயிலிலிருந்து புறப்பட்டு ஊர்வலமாக பூமாயி அம்மன் கோயிலுக்கு சென்றனர்.  பின்னர் பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தி வழிபட்டனர்.  அனைத்து மதத்தைச் சேர்ந்த பெயிண்டர்கள் இதில் பங்கேற்று சிறப்பித்தனர். அம்மன் சநத்னக்காப்பு வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !