பழநி முருகன் கோயிலில் சிங்கப்பூர் அமைச்சர் சுவாமி தரிசனம்
ADDED :627 days ago
பழநி; பழநி முருகன் கோயிலில் தரிசனத்திற்கு சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் சுவாமி தரிசனம் செய்தார். பழநி முருகன் கோயிலுக்கு சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட த்துறை அமைச்சர் சண்முகம் வருகை புரிந்தார். ஹெலிகாப்டரில் பழநி வந்த அவரை தகுந்த பாதுகாப்புடன் ரோப்கார் மூலம் மலைக்கோயில் சென்று உச்சிகால பூஜையில் கலந்துகொண்டார். அதன்பின் ரோப்கார் மூலம் மலைக்கோயில் இருந்து இறங்கினார். ஹெலிகாப்டர் மூலம் திரும்பிச் சென்றார்.