உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஆதி சிவன் -வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கோவை ஆதி சிவன் -வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கோவை; கோவை பொள்ளாச்சி ரோடு ரத்தனம் கலைக்கல்லூரி அருகே உள்ள ஸ்ரீ ஆதி சிவன் -வாராகி அம்மன் கோவிலில் வைகாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் ஆதி சிவனுக்கும் பார்வதி தேவிக்கும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு வஸ்திரத்திர அலங்காரத்தில் ஆதி சிவன் மற்றும் பார்வதி தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.  இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !