வளர்பிறை சஷ்டி; ராஜ அலங்காரத்தில் மருதாசல மூர்த்தி அருள்பாலிப்பு
ADDED :777 days ago
கோவை; இருகூர் மருதாசல மூர்த்தி கோவிலில் வைகாசி மாதம் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ராஜ அலங்காரத்தில் விபூதி காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.